நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளைய தினம் கைது செய்யப்படுவாரா ?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளைய தினம் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவி்ல் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமையவே நாமல் கைது செய்யப்படவுள்ளார்.

முறைகேடான முறையில் சொத்துக்களை சம்பாதித்தது தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்காக சத்தியக் கடிதம் ஒன்றை வழங்கவும் இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுத்த அறிவிப்புக்கு அமைய ஆஜராகாமைக்கு எதிராக ஆணைக்குழு கடந்த 30 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விடுத்த அறிவிப்புக்கு அமைய நாமல் ராஜபக்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராவதை தவிர்த்தன் மூலம் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளாரா என விசாரணை நடத்துமாறு ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இலஞ்ச ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலும் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தது.