பரீட்சை திணைக்களத்தில் பரீட்சை வினாத் தயாரிப்பின் போது பாரிய மோசடிகள் – சந்திரிகா

பரீட்சை திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் பரீட்சை வினாத் தயாரிப்பின் போது இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ சங்போதி வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கல்வி அமைச்சருக்கு சில சந்தர்ப்பங்களில் தாம் பலவந்தமான அடிப்படையில் ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இளைய அமைச்சர் என்ற ரீதியில் நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.