ஆசிய நாணயம் ஒன்றை அறிமுகம் செய்தால், ஆசியாவின் பொருளாதாரம் வலுவடையும்

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

இது எனது தனிப்பட்ட யோசனை. பணத்தை அச்சிடுவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது. 

ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன் சாதக நிலைமையை பயன்படுத்தி ஆசிய நாணய ஒன்றை அறிமுகம் செய்தால், ஆசியாவின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்