நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதம் நடத்த வருமாறு மஹிந்தவை அழைக்கும் ரவி

 

விவாதம் நடத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார். 

தொட்டலங்க பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து என்னுடன் விவாதம் நடத்த மஹிந்த தயாரா? 

நாட்டின் பொருளாதாரம் பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையை கூடிய விரைவில் தளர்த்த முடியும். 

குறுகிய காலத்தில் வரிச் சுமையை நீக்க முடியும். 

இதற்காக அரசாங்கம் விரயங்கள் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.