சிறிகொத்தவில் பீங்கான் கழுவும் சில தலைவர்கள்

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பீங்கான் கழுவுகின்றார்கள் என கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகமொன்றுக்குத் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், 

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் தற்போது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். 

இவர்களுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

மஹிந்த ராஜபக்சவை சுற்றி இன்னமும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்களை புறந்தள்ள வேண்டும். 

உரியவர்கள் மஹிந்தவை சுற்றியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.