பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் அப்பாவிகளை இலக்கு வைத்து காவுகொள்கின்றது : மஹிந்த

பயங்கரவாத நடவடிக்கைகளின் போது அப்பாவிகளே இலக்கு வைக்கப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஈராக்கின் தலைநகர் பத்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் அப்பாவிகளை இலக்கு வைத்து காவுகொள்கின்றது. 

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலை வெளியிடுகின்றேன்.

குறிப்பாக இந்த சம்பவத்தில் சிறுவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.