தேயிலை மலையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி

க.கிஷாந்தன்

 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று 10.05.2016 அன்று மீட்கப்பட்டுள்ளது.

leopard (2)_Fotor

 

10.05.2016 அன்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர்.

 

தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.

leopard (1)_Fotor

சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை மீட்டு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.