பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை – மஹிந்த ராஜபக்ச

Mahinda-Rajapaksa

 

பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மஹிந்தவின் இரண்டு புதல்வர்களும் இருவேறு இடங்களுக்கு விசாரணைக்குஅழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த மஹிந்த இது அரசியல் பழிவாங்கல் என்பதை குழந்தைகள் கூடஅறியும் என தெரிவித்தார்.

அத்துடன் தான் உகண்டா செல்வது உகண்டா ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் என்றும் மஹிந்த இதன்போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.