நாட்டில் இடம்பெறுகின்ற கைது நடவடிக்கைகள் குறித்து தனக்கு தெரியாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்

Brigadier-Jayanath-jayaweera-415x260

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடமே பெற்றுக் கொள்ள வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

புனர்வாழ்வு தொடர்பான தகவல்கள் குறித்து தனக்கு தெரியாது எனவும், அது குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடமே பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற கைது நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

இந்த விடயம் குறித்தும் தனக்கு தெரியாது என கூறிய அவர், பொலிஸாரிடமே தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.