மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்

mahintha rajap

 

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் இராணுவப் பாதுகாப்பை வழங்குமாறு அமரபுர நிக்காயாவின் மகாநாயக்கர் தவுல்தின ஞானேஸ்ஸர தேரர் கோரியுள்ளார். 

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மகிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்வதற்கான தீர்மானத்தை மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.