இலங்­கையின் மீன் ஏற்­று­மதி தடை நீக்கம் – ஐரேப்­பிய ஒன்­றியம் அறி­விப்பு !

இலங்­கையின் மீன் ஏற்­று­மதி குறித்து விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நாளை 21 ஆம் திகதி முதல் நீக்­கிக்­கொள்­ளப்­படும் என ஐரேப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது.

flages3

இது­தொ­டர்­பான அறி­விப்­பினை கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சு உறு­தி­செய்­துள்­ளது.

இதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யினை அடுத்த வார­ம­ளவில் ஐரோப்­பிய பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை மீன­வர்கள் மீன்­பி­டிக்கும் சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தேச சட்­ட­திட்­டங்­களை மீறு­வ­தாக கூறியே குறித்த தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் கடந்த 3 வரு­டங்­க­ளாக விதித்­தி­ருந்­தது.

மேலும், குறித்த தடை­யினால் கடந்த 3 வரு­ட­மாக இலங்கை மீன்­களை ஐரோப்­பிய நாடுகள் புறக்­க­ணித்து வந்­தன.

இதே­வேளை, இந்த விடயம் தொடர்­பாக தற்­போ­தைய அர­சாங்கம் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு அமைய இந்தத் தடை­யினை நீக்­கு­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­வந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன், இலங்கை சர்­வ­தேச சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்டும் என ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கடு­மை­யான எச்­ச­ரிக்­கையின் பின்னே இந்தத் தடையை விலக்­கிக்­கொள்­வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.