உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட தீனுல் ஹஸன் மௌலவியின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யவும்

பழுலுல்லாஹ் பர்ஹான்

 

DSC_2074_Fotor

 காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியு.தீனுல் ஹஸன் பஹ்ஜி திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு ஆசிரி சென்றல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அண்மையில் புனித மக்காவுக்கு உம்ரா கடமைக்காக சென்று நாடு திரும்பிய பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தஃவாப் பணியில் ஈடுபடும் பல்வேறு பிரபல உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட இவரின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யுமாறு காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.