15ம் திகதி அரச விடுமுறை – உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது

happy-holidays_Fotor

 

எதிர்வரும் 15ம் திகதியை அரச விடுமுறை என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

புத்தாண்டுக்காக ஊருக்குச் சென்றவர்கள் வெள்ளிக்கிழமை கடமைக்கு திரும்புவது நிச்சயமற்றது என்ற காரணத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதியை அரச விடுமுறையாக அறிவிக்க ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளனர்.

15ம் திகதியை அரச விடுமுறையாக அறிவிக்குமாறு உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன கோரியிருந்தார்.

கடமைக்குத் திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பளவானதாக காணப்படும் எனவும் இதனால் மின்சாரம் நீர் உள்ளிட்ட கட்டணங்களை விடுமுறை அளிப்பதன் மூலம் இந்தச் சிக்கலை தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.