இலங்கையர்களின் பணம் பற்றி விசாரணை செய்ய பனாமா செல்ல வேண்டும் – பிரதமர்

ranil_wikramasinghe-2_Fotor

 

இலங்கையர்களின் பணம் பற்றி விசாரணை செய்ய பனாமா செல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு சொந்தமான பணம் முதலீடு செய்யபப்டடுள்ளமை குறித்து விசாரணை நடாத்த பனாமா செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பனாமா ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து அரசாங்கம் எவ்வித உத்தியோகபூர்வமான அறிவிப்பினையும் வெளியிடவில்லை.