ரணிலுக்கு எதிராகவும் நாளை முறைப்பாடு !

ranil-sworn-maithree
 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை புதன்கிழமை (13) முறைப்பாடு செய்யவிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 

 பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கட்சித்தலைவர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த உறுமய அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.