நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை : பொலிஸ்மா அதிபர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
இன்று நாபானபிரேமசிறி மகாநாயக்க தேரரை சந்தித்தப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.