யோசித்த ராஜபக்சவை பொலிஸ் நிதிமோசடி பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

yositha rajapakse
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையில் நிதிமோசடி தொடர்பான பொலிஸ் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று கல்கிஸ்ஸை நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 4ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் யோசித்த ராஜபக்ச பொலிஸில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அதனை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.