தேர்தலை தாமதிக்காமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டியது அவசியம்

mahintha amaraweera
உள்ளூராட்சித் சபைத் தேர்தலை தாமதிக்காமல் நடத்துமாறு தான் அரசை நிர்ப்பந்தம் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சரியான தருணம் இதுவே எனவும், தேர்தலை தாமதிக்காமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த அமரவீர தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிப்பதற்காக அவரை சந்தித்தபோதே தனது கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்