அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது கிளைகள் அங்குரார்ப்பணம்

எம்.வை.அமீர்

 

1_Fotor

 

நாட்டின் நாலாபக்கங்களிலும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கிளைகளை உருவாக்கி அதனூடாக பிரதேச மற்றும் மாவட்ட மட்ட அமைப்புகளை உருவாக்கிவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதிலும் கிராம மட்ட கிளைகளை அங்குராப்பணம் செய்து வருகின்றது அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது 02,04,14  ஆகிய பிரிவுகளுக்கான கிளைகள் அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு குறித்த பிரதேசங்களில் கடந்த 2016-03-31 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு கிழக்குமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சமூ சிந்தனையாளருமான அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்..

2_Fotor

 

இந்நிகழ்வுகளில் சாந்தமருது 02 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக 

தலைவர் : எம்.வி.எம். மாஹிர்

செயலாளர்: ஏ,ஜி.எம்,ஜலீல் 

பொருளாளர்: ஜெ.எம்.அஷ்பாக் உள்ளிட்ட குழுவினரும் 

 

சாந்தமருது 04 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக

தலைவர் : யூ.எல்.எம்.ஷபீக் 

செயலாளர்: எஸ்.எம்.ஜவ்பர்  

பொருளாளர்: ஆர்.எம்.மர்சூக்  உள்ளிட்ட குழுவினரும் 

 

 

 

சாந்தமருது 14 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக

 

தலைவர் : எம்.ஐ.ஜெமீல் 

செயலாளர்: எஸ்.எம்.எம்.சிரான்   

பொருளாளர்: ஏ.எம்.ஜஹான்  உள்ளிட்ட குழுவினரும் தெரிவு நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.