தனியாருக்கு சொந்தமான மூன்று மின்சக்தி உற்பத்தி நிலையங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை !

powerlines-620x360_Fotor
அமைச்சரவை பத்திரத்தின் மூலம் தனியாருக்கு சொந்தமான மூன்று மின்சக்தி உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கை அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

100 மெகாவோட்ஸ் உற்பத்தியைக்கொண்ட புத்தளம் ஹெலடானவி உற்பத்தி மையம், 100 மெகாவோட்ஸ் உற்பத்தியைக்கொண்ட எம்பிலிப்பிட்டிய உற்பத்தி நிலையம், 60 மெகாவோட்ஸ் உற்பத்தியைக் கொண்ட மாத்தறை நிலையம் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் திட்டமே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அவசர தேவைகளின் நிமித்தம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் மின்சார சட்டப்படி ஏல முறையில்லாமல் தனியார் மின்சார நிலையங்களை கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.