உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் மாநகரில் பெண்களின் பேரணி !

க.கிஷாந்தன்

 

IMG_0011_Fotor

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் மாநகரில் பெண்களின் பேரணி ஒன்று 12.03.2016 அன்று இடம்பெற்றது.

12.03.2016 அன்று காலை அட்டன் மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து பேரணியாக அட்டன் பொஸ்கோ கல்லூரி வரை சென்ற இந்த பேரணியை கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் தலைமை தாங்கி நடத்தியது.

‘பெண்களுக்கு சம அந்தஸ்து வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த பேரணியில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

IMG_0024_Fotor

 

இப்பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் “பெண்கள் எங்கள் கண்கள், பெண்களுக்கான சம அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்போம், பெண்களை தாயாக போற்றுவோம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்” என இவ் வாசகங்களை அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக கலந்து கொண்டனர்.

இதில் செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டுக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவலாய குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

IMG_0032_Fotor