புதிய சட்டம் !

sri-lanka-flag-national-symbolic-pic

 தேசியக்கொடி தொடர்பான நிர்ணயங்களை நாட்டின்  பொதுச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதன் மூலம் அதற்கு எதிராக செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பிழையான கொடிகளை தயாரிப்போர், விநியோகஸ்தர்கள் மீது புதிய சட்டத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடிகளை பயன்படுத்தியமை தொடர்பில் சில தனிப்பட்டநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே  மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 தேசிய கொடியின் தர நிர்ணயம் குறித்து வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்குமாறு அமைச்சு, நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளது. தேசிய கொடி பயன்பாடு தொடர்பில் எழுந்து சர்ச்சைகளைத் தொடர்ந்து அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.