சீரற்ற காலநிலை !

00015a81_medium

 நாட்டில் நிலவும் தொடர்ச்­சி­யான சீரற்ற கடும் மழை­யு­டனான கால­நிலை கார­ண­மாக கடந்த 48 மணி நேர காலப்­ப­கு­தியில் 192 குடும்­பங்­களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் இடர் முகா­மைத்­துவ நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி குறிப்­பி­டு­கையில்,

தொடர்ச்­சி­யான கடும் மழை­யுடன் கூடிய கால­நி­லை ­கா­ர­ண­மாக கடந்த 48 மணி நேர காலப்­ப­கு­தியில் நேற்­றுக்­காலை வெளியி­டப்­பட்­டுள்ள தக­வலின் பிர­காரம் நாட­ளா­விய ரீதி­யாக 192 குடும்­பங்­களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னி­டையே நேற்று முன்­தினம் இரவு தொடக்கம் நாட்­டில்­நி­லவும் சீரற்ற கால­நிலை மற்­றும் ­கடும் மழையின் கார­ண­மாக கொழும்பு மாவட்­டத்தில் 22 குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் இடம் பெயர்ந்­துள்­ளனர்.

இவ்­வாறு இடம்­பெ­யர்ந்த குறிப்­பாக கொழும்பு – ராஜ­கி­ரிய பகு­தியில் உள்ள சில குடும்­பங்கள் தற்­கா­லிக முகாம்­களில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சீரற்ற கால­நி­லையி
னூடான மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் மின்னல் தாக்கம் ஏற்­ப­டு­வ­தற்­கான அபாயம் உள்­ளதால் மக்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும்.

மின்னல் தாக்கம் கார­ண­மாக இவ் வருடம் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 11 ஆக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவ லில் தெரிவிக்கப்பட்டுள்ளது.