இந்த அர­சாங்கம் உட­ன­டி­யாக கலைக்­கப்­பட வேண்டும் – விமல் !

4a349bb0893c4a920f0bc8062b30c0d4_XL_Fotor

 உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு புதிய அர­சாங்கம் தெரிவு செய்­யப்­பட வேண்டும். மக்கள் பலம் இல்­லாத அர­சாங்கம் ஆட்­சியில் இருப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற் றும் மஹிந்த சந்­திப்பு வெறும் கண்­து­டைப்பே ஆகும். மக்­களை ஏமாற்­றவே இந்த களி­யாட்­ட­மெல்லாம் செய்­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நூறு நாட்கள் முடி­வ­டைந்­த­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தியை அர­சாங்கம் வழங்­கி­யது. ஆனால் இன்று நூறு நாட்கள் கடந்தும் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் எமது கண்­ட­னத்தை தெரி­விக்­கின்றோம். மக்­களின் ஆத­ரவு இல்­லாத அர­சாங்­கமே இன்று ஆட்சி நடத்­து­கின்­றது.

ரணில் விக்­க­ர­ம­சிங்­க­விற்கு அர­சாங்­கத்தை நடத்தும் அதி­காரம் மக்­களால் வழங்­கப்­ப­ட­வில்லை. அதேபோல் கூட்­டணி அர­சாங்­கத்தை மக்கள் விரும்­பவும் இல்லை.ஆனால் இவர்கள் பாரா­ளு­மன்­றத்தை கலைக்­காது தொடந்தும் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­லவே முயற்­சிக்­கின்­றனர். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தை கலைக்­காது இருக்­கவே இப்­போது 20 ஆவது திருத்தச் சட்­டத்­தையும் முன்­வைக்­கின்­றனர். 2௦ஆ­வது திருத்தும் நிறை­வேற்­றப்­ப­ட­போ­வ­தில்லை .ஆகவே நிறை­வேற்­றப்­ப­டாத சட்­ட­மூ­லத்தை காரணம் காட்டி பாரா­ளு­மன்­றத்தை நீடிக்க ஜனா­தி­பதி உள்­ளிட்ட தேசிய அர­சாங்கம் திட்டம் தீட்டி வரு­கின்­றது. இதற்கு நாம் ஒரு­போது இட்­ட­ம­ளிக்க மாட்டோம்.

இப்­போது இருப்­பது ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான அர­சாங்கம். மக்கள் ஆட்­சியை மதிக்­காத அர­சாங்கம். எனவே இந்த அர­சாங்கம் உட­ன­டி­யாக கலைக்­கப்­பட வேண்டும் . உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற தேர்தல் நடத்­தப்­பட்டு புதிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதேபோல் எதிர்க்­கட்சி யார் என்­ப­தையும் விரைவில் தீர்­மா­னிக்க வேண்டும். பல­மான ஆளும் கட்­சியோ சரி­யான எதிர்க்­கட்­சியோ இல்­லாத ஒரு பாரா­ளு­மன்றம் இப்­போது செயற்­பட்­டுக்­கொண்டு உள்­ளது. அதை தடுக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்கை.

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை

மேலும் இந்த அமர்­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டும். உட­ன­டி­யாக பொதுத்­தேர்­தலை நடத்தி யார் அர­சாங்கம் என்­பதை தெரிவு செய்ய வேண்டும். இல்­லையேல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வந்து நிறை­வேற்­றுவோம். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­கோரி போரா­டவும் தயா­ராக உள்ளோம்.

மைத்­தி­ரி­பால மகிந்த சந்­திப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு மக்­களை ஏமாற்றும் வெறும் கண்­து­டைப்பு மட்­டுமே. ஊட­கங்­களின் மூலம் மக்­களை ஏமாற்­றவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே ஜனா­தி­பதி மற்றும் மஹிந்த சந்­திப்பின் நோக்கம் வேறு ஆனால் சந்­திப்பு குறித்த கார­ணத்தை பிர­தா­னப்­ப­டுத்தி நடக்­க­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பதில் கட்­சியை பலப்­ப­டுத்தி எமது அர­சாங்­கத்தை கொண்­டு­வரும் நோக்கம் கட்­சியில் யாருக்கும் இல்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை பலப்படுத்தவே விரும்புகின்றனர். ஆகவே இவர்களை நம்பி கலத்தில் இறங்குவது சாத்தியமற்றதே. கட்சிக்குள் பனிப்போர் நிலவும் நிலையில் இரு தலைவர்களையும் பிரிக்கும் நோக்கத்திலேயே இச் சந்திப்பு நடந்துள்ளது என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்தார்.