விசாரணை !

Gota

 முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த ­பாய ராஜ­ப­க் ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய் வுப் பிரி­வினர் இன்று விஷேட விசா­ர­ணை­யொன்றை நடத்­த­வுள்­ளனர். இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு கடிதம் மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 மிக் விமான கொள்­வ­னவு மற்றும் லங்கா ஹொஸ்­பிடல்ஸ் பங்கு விற்­பனை ஆகிய விவ­கா­ரங்­களின் போது நிகழ்ந்­த­தாக கூறப்­படும் நிதி மோசடி தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

 2006ஆம் ஆண்டு உக்­ரேனில் இருந்து மிக் ரக விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட போது நிதி­மோ­ச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரூ­டாக பிர­தமர் தலை­மை­யி­லான மோசடி ஒழிப்பு ஆணைக் உப குழு­விர்கு முறைப்­பாடு கிடைத்­தி­ருந்­தது.

இந்­த­நி­லையில் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­யல்­கங்­கா­ர­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந்த கொள்­வ­னவின் போது 14.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி­துஸ்­பி­ர­யோகம் இடம்­பெற்­றுள்­ள­தாக முறைப்­பாட்­டாளர் தெரி­வித்­துள்ள நிலையில் இக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் விமா­னப்­படை தள­பதி எயார் சீப் மார்ஷல் டொனல்ட் பெரே­ரா­வி­டமும் மற்­றொரு முன்னாள் விமா­னப்­படை தள­ப­தி­யான எயா மார்ஷல் ரொஷான் குணத்­தி­ல­க­வி­டமும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலை­யி­லேயே இன்ரைய தினம் நிதிக் குர்ரப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.