ஜெர்மனியின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சந்தித்துள்ள ஜனாதிபதி !

maithiri
ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சற்று முன்னர் சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். 

அத்துடன இரு நாடுகளுக்கிடையிலும் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.