விளக்கமறியல் நீடிப்பு !

kumar gunarat
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக குமார் குணரத்தினம் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது பொலிசார் அவருக்கு எதிரான சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியிருந்தனர்.

எனினும் எதிர்வரும் 23ம் திகதி குமார் குணரத்தினத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விளக்கமறியல் உத்தரவை நீடித்த நீதிபதி, வழக்கையும் 23ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.