சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் கரம் கொடுப்போம் கலை வளர்ப்போம் எனும் கலை இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலை இலக்கிய ஊடகவியலாளர்கள் கௌரவம் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் போரசியர் துரை மகேந்திரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (14) ஒரே மேடையில் நடாத்தியது.

DSC_4876_Fotor_Collage_Fotor
இந்நிகழ்வில் கடந்த வருடம் கலை இலக்கியத் துறைகளில் பங்காற்றி அரச கலாபூஷணம் விருதுபெற்ற ஊடகவியலாளர்கள் பொன்னாடை போர்த்தியும், மாலை அனுவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்டவர்கள்:
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ் சன்முகராஜா, சுடர் ஒளிபத்திரிகையின் பிரதம ஆசிரியர் பத்மசீலன், நடன இயக்குனர் மல்லிகா கீர்த்தி, சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.இஸட். அஹமட் முனவ்வர், சமுகஜோதி எம்.ஏ.றபீக், பட்டிமன்ற புகழ் ஆர், வைத்தமாநிதி, தொலைக்காட்சி புகழ் ராஜகணேஷன், பாடகர் உபைதுல்லா மஹ்தூம் ஆகியோரே கௌரவிக்கப்பட்டவர்களாகும்.

DSC_4899_Fotor_Collage_Fotor