யோசிதவுக்கு பிணை கோரி மேல் நீதிமன்றத்தில் மனு !

YOSHITHA_2717441f
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், கடற்படை லெப்டினனுமான யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த ஐந்து சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்க கடுவலை நீதவான் அண்மையில் மறுப்பு தெரிவித்த 
நிலையிலேயே மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.