இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைனையும் விட்டு வைக்காத செல்பி !

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார்.
அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் கமெராவை கையில் எடுத்த அவர், ஊடகவியலாளர்களை படம் எடுத்ததோடு அவர்களோடு செல்பியும் (Selfie) எடுத்துக் கொண்டார்.