திருகோணமலை அக்போபுர கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது !

lulzsec-arrested

 

 எப்.முபாரக்                

திருகோணமலை அக்போபுர கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை சனிக்கிழமை (6)மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      கித்துல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      குறித்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்வதாக அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை இரண்டு கிலோ கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.