யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்புக்கொடி , ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பில் !

Jajjni black_CI

 

யாழ்.பல்கலைகழகத்தில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பல்கலைகழக வளாகத்தினுள் பல்வேறு இடங்களில் இன்று காலை கறுப்புக்கொடிகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.

கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டதை அடுத்து பல்கலைகழகத்திற்கு பொலிசார் வர வழைக்கப்பட்டு பல்கலை கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய நிலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பல்கலைகழகத்திற்கு வரும் மாணவர்களையும் சோதனை செய்து , விசாரணையின் பின்னரே உட் செல்ல அனுமதிக்கின்றனர்.

jaffna_black_001