மகிந்தவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கன­வாக மாறி­யுள்­ளது. மக்­களின் ஆணையை ஏற்­றுக்­கொண்டு தனது 70 வயதில் அர­சியல் செய்­வ­தனை விடுத்து வீட்டில் இருந்து நன்­மை­யான காரி­யங்கள் செய்து புண்­ணியம் தேட வேண்டுமென்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.

 

இதே­வேளை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கூட்டு சேர்­வ­தாக இருந்தால் புதிய பாரா­ளு­மன்­றத்தில் தேசிய அர­சாங்கம் சாத்­தி­ய­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.mangala

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கும் நேற்று முன் தினம் இடம்­பெற்ற சந்­திப்பில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆசை நிறை­வே­ற­வில்லை. மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளிக்கும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னூ­தா­ர­ண­மாக செயற்­பட்­டுள்ளார்.

மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அவ­தாரம் மீளவும் உரு­வெ­டுத்­துள்­ளது. இந்த அவ­தாரம் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பெரும் தடை­யாக உள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 19 அவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­று­வ­தற்கும் இந்த அவ­தார கும்பல் பெரும் தடை­யாக இருந்­தது.

இலங்கை வர­லாற்றில் இது­வரை காலங்­களும் இல்­லாமல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிப்­ப­தற்கு மூவின மக்­களும் ஒன்று சேர்ந்­தனர். வடக்கு ,கிழக்கில் 80 வீதத்திற்கு மேற்­பட்ட வாக்கு பதிவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வந்­த­டைந்­தது.

இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டின் பிர­த­ம­ராக வருவதற்காக தனது உயிரை தியாகம் செய்ய தயா­ராக இருக்­கிறார். தனது முழு­மை­யான மோச­டிகள் நாட்டு மக்­க­ளுக்கு வெளிவந்து விடுமோ என்ற அச்­சத்­தி­லேயே அவர் பிர­த­ம­ராக கனவு காண்­கிறார். இதன்­ப­டியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சந்­திப்­பினை நடத்தினார்.

எனினும் அந்த பேச்­சு­வார்த்தை சாத­க­மாக நிறை­வ­டை­ய­வில்லை. இதன்­படி மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டின் பிர­த­ம­ராக வேண்டும் என்ற கனவு பகல் கன­வாக மாறி­யுள்­ளது. அடுத்த தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சி­ங­கவே பிர­த­மர் கதி­ரையில் அமர்வார் .

மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்து கூட்டு சேர்­வ­தாக இருந்தால் புதிய பாரா­ளு­மன்­றத்தில் தேசிய அர­சாங்கம் சாத்­தி­ய­மில்லை.

ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி வீண் காரி­யங்­களை ஈடு­பட கூடாது. மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர் பிர­த­ம­ராக விரும்­பு­வது வெட்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். எனவே மஹிந்த ராஜ­பக்ஷ மக்­களின் ஆணையை ஏற்­றுக்­கொண்டு தனது 70 வயதில் அர­சியல் செய்­வ­தனை முற்­றாக நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டும் என்றார்.