பீக் கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர் !

சர்ச்சைக்குரிய மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை  இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர்.கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

peacock-palace-050415-seithy (2)
குறிப்பிட்ட நீச்சல் தடாகத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான தங்க ஆபரணங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையிலேயே பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட மயில் மாளிகையின் உரிமையாளரான செல்வந்தர் ஏஎஸ்பி லியனகே தங்க ஆபரணங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாவதால் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.