அரசியல் கட்சிகளின் போட்டியில் நாட்டை சீரழித்து விட வேண்டாம் -மாதுலுவாவே தேரர்

  theroநாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் உட­ன­டி­யாக அந்த மாற்­றத்தை சீர்­கு­லைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

 

  இப்­போ­தைக்கு தேர்­தலை நடத்­தாது தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதே சிறந்­த­தென கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் குறிப்­பிட்டார்.அர­சியல் கட்­சி­களின் போட்­டியில் நாட்டை சீர­ழித்­து­விட வேண்டாம். நாட்டில் ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதே முக்­கி­ய­மா­னது எனவும் அவர் குறிப்­பிட்டார்.உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்ள நிலையில் தேசிய அர­சாங்கம் கலைக்­கப்­ப­டு­வது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் நில­விய சர்­வா­தி­கார ஆட்­சியை தேசிய அர­சாங்­கத்தின் மூல­மா­கவே வீழ்த்­தினோம். தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதால் தான் அதி­காரப் பகிர்வு, சுயா­தீன சேவை­களை பாது­காத்தல் உள்­ளிட்ட ஜன­நா­யக வேலைத்­திட்­டங்­களை செய்ய முடிந்­துள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுப்­பதே நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட சிறந்த வழி­மு­றை­யாகும்.

இப்­போது ஏற்­பட்­டி­ருக்கும் நல்ல மாற்­றதை உட­ன­டி­யாக சீர்­கு­லைத்து மீண்டும் நாட்டை பாதா­ளத்தில் தள்­ளு­வ­தற்­காக ஒரு சிலர் முயற்­சிக்­கின்­றனர். அதற்­கான பாதையை இந்த அர­சாங்கம் ஏற்­ப­டுத்தி கொடுத்­து­வி­டக்­கூ­டாது. கடந்த காலத்தில் சர்­வா­தி­கார பாதையில் மஹிந்த அர­சாங்கம் பய­ணித்­ததை மக்கள் நன்கு உணர்ந்­ததன் கார­ணத்­தினால் தான் ஆட்சி மாற்­றத்தை விரும்­பி­னார்கள்.அதேபோல் தேசிய அர­சாங்கம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உரு­வாக்கும் என்ற கார­ணத்­தினால் தான் மக்கள் தேசிய அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலைமையில் இப்­போது தேசிய அர­சாங்­கத்தை கலைத்து மீண்டும் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தேவை இல்லை. எனவே தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து ஆட்­சியை கொண்டு செல்ல வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நல்­ல­தொரு ஆட்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதை மக்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

மேலும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரு­வது தொடர்­பிலும் குழப்­ப­க­ர­மான நிலை­மைகள் உள்­ளன. இந் நிலையில் உட­ன­டி­யாக தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வந்து அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் சாத்­தி­ய­மில்லை. எனவே சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்தவேண்டும். அரசியல் போட்டியில் ஆட்சியை தக்கவைப்பதற்காக நாட்டை மீண்டும் சீரழித்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.