100 லட்சம் ரூபா எங்கே ? – சுசில் பிரேம ஜயந்த

susil பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யாக 10 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இடைக்­கால வரவு–செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அறி­வித்தார். ஆனால் இது­வரை நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. நிதி­ய­மைச்சர் அறி­வித்த 10 மில்­லியன் ரூபா எங்கே? என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ள­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த கேள்­வி­யெ­ழுப்­பினார்.

 

 வீட்­டுக்­குள்­ளேயே திரு­டர்­களை வைத்­துக்­கொண்டு அர­சாங்கம் திரு­டர்கள் குறித்து பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக கூறி­னார்கள். ஆனால் என்ன நடந்­தது? இதுதான் நல்­லாட்சி போன்று தெரி­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சுசில் பிரேம்­ஜ­யந்த மேலும் குறிப்­பி­டு­கை யில்,

மேதினக் கூட்டம்

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மேதினக் கூட்டம் சிறப்­பாக நடை­பெற்­றது. நாங்கள் சிறிய மைதானம் ஒன்றில் கூட்­டத்தை நடத்­தி­ய­தாக சிலர் கூறி­யுள்­ளனர். ஆனால் நாங்கள் முதலில் கெம்பல் பார்க் மைதா­னத்தை கேட்­டி­ருந்தோம். ஆனால் கொழும்பு மாந­கர சபை அதனை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கொடுத்­து­விட்­டது. அதனை நல்­லாட்­சியின் ஒரு அங்­க­மாக இருக்கும் என்று நாங்கள் எண்­ணு­கின்றோம்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் மேதினக் கூட்­டத்­துக்கு அதிக மக்கள் கலந்­து­கொண்­டார் கள் என்றும் அதன்­மூலம் பலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மார்­தட்­டிக்­கொள்­கின் ­றனர். ஆனால் மேதினக் கூட்­டத்­துக்கு வரு­கின்ற மக்­களை வைத்து கட்­சிக்­கான ஆத­ரவை கணிப்­பிட முடியும் என்றால் அது வெறு­மனே மாயை­யாகும்.

ஜனா­தி­பதி திட்­ட­வட்டம்

சுதந்­திரக் கட்­சியின் கூட்­டத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னை யாரும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்றும் மக்கள் மட்­டுமே தன்னை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்றும் கூறினார். இது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த கூற்­றாகும். இதன்­மூலம் ஜனா­தி­பதி சிறந்த செய்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அதா­வது சிலர் ஜனா­தி­ப­தியை கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதற்கு ஜனா­தி­பதி சிறந்த பதிலை வழங்­கி­யுள்ளார். அது மட்­டு­மன்றி சர்­வ­தேசம் எந்­த­வ­கை­யிலும் இலங்­கையின் விவ­கா­ரங்­களில் தலை­யிட முடி­யாது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். .

அமெ­ரிக்க இரா­ஜாங்க செயலர் ஜோன் கெரி இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். இது முக்­கி­ய­மான விட­ய­மாகும். அத்­துடன் இலங்­கைக்கு உதவி செய்யத் தயார் என்றும் அமெ­ரிக்க இரா­ஜாங்க செயலர் கூறி­யுள்ளார். அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­மை­யையும் அவர் பாராட்­டி­யுள்ளார். இது ஜனா­தி­ப­தியின் சிறந்த தலை­மைத்­து­வத்தை வெளிக்­காட்­டு­கின்­றது.

பொய்­கார அர­சாங்கம்

தற்­போ­தைய அர­சாங்கம் பொய்­கார அர­சாங்­க­மாக மாறி­யுள்­ளது. அதா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யாக 10 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இடைக்­கால வரவு – செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அறி­வித்தார். தற்­போது 2015 ஆம் ஆண்டின் மே மாதமும் வந்­து­விட்­டது. ஆனால் இது­வரை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏன் இந்த அர­சாங்கம் இவ்­வாறு பொய்­கூ­ற­வேண்டும். நாட்டில் பாரிய அள­வி­லான மற்றும் சிறி­ய­ள­வி­லான அபி­வி­ருத்தி திட்­டங்­களும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. 100 இலட்சம் ரூபாவை வழங்­கு­வ­தாக கூறி இந்த அர­சாங்கம் ஏமாற்­றி­விட்­டது. பொய்­களை கூற­வேண்டாம் என்று அர­சாங்­கத்­துக்கு கூறு­கின்றோம். தற்­போ­தைய அர­சாங்­கத்தின் எந்த அமைச்சர் வேலை செய்­கின்றார்? நாங்கள் மேற்­கொண்ட திட்­டங்­க­ளுக்கு தமது பெயர்­களை வைத்­துக்­கொண்டு இருக்­கின்­றனர். இவ்­வாறு செய்­வ­தற்கு வெட்­க­மாக இல்­லையா? என்று கேட்­கின்றோம்.

அரச வங்­கி­களில் என்ன நடக்­கின்­றது என்று நாங்கள் அறிந்­து­கொண்­டுள்ளோம். அவை தொடர்பில் விரைவில் அறி­விப்போம். அத்­துடன் தனியார் வங்­கி­களின் பணிப்­பாளர் சபைக்கு அரசு சார்பில் ஒருவர் இடம்­பெ­ற­வேண்டும் என்று கூறப்பட்­டுள்­ளது. அதற்கு அர­சாங்க முக்­கியஸ்­தர்கள் தமக்குத் தேவை­யா­ன­வர்­களை நிய­மிப்­பதை காணமுடி­கின்­றது. மத்­திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்பட்டுள்ளது. அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றது. ஆனால் வீட்டுக்குள்ளேயே திருடர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் திருடர்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றது.

ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன் றத்தை கலைப்பதாக கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? ச.தொ.ச.வை விற்றவர்கள் இன்று அமைச்சர்களாகியுள்ளனர். இதுதான் நல்லாட்சி என்றும் கூறுகின்றனர் என்றார்.