விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 29 பேர் விடுதலை!

எப்.முபாரக்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் இருபத்தொன்பது பேரையும்  திருகோணமலை  நீதிமன்றம், இன்று செவ்வாய் கிழமை(19)  விடுதலை செய்துள்ளது.

INDIAN-FISHERMEN-1_Fotor

குறித்த 29 மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்ளத்தின் அனுமதி, இன்று செவ்வாய் கிழமை(19) திருகோணமலை   நீதிமன்றத்துக்கு கிடைக்கப்பெற்ற நிலையிலே குறித்த தமிழக மீனவர்கள் 29  பேரையும் திருகோணமலை நீதிமன்ற  நீதவான் ரி.சரவணராசா    விடுதலை செய்தார்.

INDIAN-FISHERMEN-2_Fotor

குறித்த மீனவர்கள் 29 பேரும்  திருகோணமலை கடற்படை  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று இந்தியா தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகளும் கடற்படையினரும்  மேற்கொண்டு வருகின்றார்கள்.