மன்னாரின் குறைபாடுகள் தொடர்பில் விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை: ரிசாத்

 

சுஐப் எம் காசிம்

 

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, சிரேஷ்ட பத்திரிகையாளர் K.T.ராஜசிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்,

IMG_9270_Fotor

மன்னார் மறைமாவட்ட ஆயர், அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்துக்கு ஆற்றி வரும் பணிகளை பாராட்டியதுடன் இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இன்னும் தீவிரம் காட்டி தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் மன்னாரில் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயண்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

இந்த சந்திப்பில் ஆயருடன் பங்கேற்றிருந்த மன்னார் மாவட்ட குரு முதல்வர்  மற்றும் வணக்கத்துக்குரிய பாதிரிமார்,அமைச்சர் றிசாதின் பணிகளை மனந்திறந்து பாராட்டினர். மண்ணின் மைந்தன் ஒருவர் அமைச்சரவையில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என்று பாதிரியார் முரளிதரன் கூறினார். அத்துடன் அமைச்சரின் தேவையை மன்னார் மக்கள் பெரிதும் உணர்ந்துள்ளதாகவும், அவர்கள் அமைச்சரை மிகவும் நேசிப்பதாகவும் கூறினார். மக்கள் பணியாற்றுவதற்குக் கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை அமைச்சர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்,அமைச்சரின் பணிகளுக்கு தாங்கள் எந்த நேரமும் உதவக் காத்திருக்கின்றோம் என்றும் ஆயரும், பாதிரிமாரும் தெரிவித்தனர்.

IMG_9277_Fotor

ஆயருடனான சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள், மன்னாரின் குறைபாடுகள் தொடர்பில் விடுத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டு விரைவில்நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

இறுதியாக ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தனது வாழ்த்துக்களையும், ஜெபங்களையும் தெரிவித்தார்.  

IMG_9279_Fotor