பேருவளை ஓஏஸிஸ் வாலிபர் சங்கத்தினால் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு !

 எம். எப். மொஹமட்

 

பேருவளை ஓஏஸிஸ் வாலிபர் சங்கத்தினால் (Oasis Youth Foundation) மூன்றாவது வருடமாகவும் களுத்துறை மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 400 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு அண்மையில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கத்தின் தலைவர் ஏ. ஐ. எம். ரியாஸ்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரதம அதிதியாக பேருவளை பிரதேச சபை செயலாளர் சதுர மல்ராஜ் கலந்து கொண்டார். சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

IMG-20160106-WA0001(1)_Fotor IMG-20160106-WA0006_Fotor IMG-20160106-WA0011_Fotor