(வீடியோ) ஹலோ ஜனாதிபதி, உங்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் !

 

வீடியோ ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெறும் நாளை எட்டாம் திகதி மக்கள் பிரச்சனைகளை ஜானதிபதிக்கு சொல்லுங்கள் என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஊடக பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர் கயந்த கருனாதிலக்க நேற்று ஊடக அமைச்சில் நேற்று 06.01.2016 தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள் எந்தவொரு தொலை பேசி சேவை மூலமும் அல்லது இன்ரநெட் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

01_Fotor

கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலுள்ள எந்தவொரு பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு வழங்ககூடிய வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜானதிபதி `ஹதபிம ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்` என்ற நிகழ்ச்சி நாளை முற்பகல் 11மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகும். ஜனாதிபதி பதிவியேற்று ஓராண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் முக்கிய உரையினை இலங்கையின் முன்னாள் இந்திய உயர் இஸ்தானிகரும், மாகாத்மா காந்தியின் பேரனுமாகிய கோபால கிருஸ்ன காந்தி உரையாற்றுவார்.