மஹிந்த + மைத்ரி சந்திப்பை எதிர்க்கின்றார் , வாசு !

rcxem8NU_Fotor_Collage

திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை போன்றதே மைத்திரி,மஹிந்தவை சந்திப்பதாகும்.

இவ்வாறானதோர் சந்திப்பை நாம் எதிர்க்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியின் ஆதரவாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இந்த சந்திப்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவும் சந்­திப்­பது தொடர்­பாக நாம் எவ்­வி­த­மான எதிர்­பார்ப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­திரி ஒரு புறம் ஐ.தே. கட்­சி­யுடன் இணைந்து கூட்­ட­ர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றார். மறு­புறம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் சந்­திப்­ப­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்ளார்.

இது திரு­ம­ண­மான ஒருவர் இன்­னொரு பெண்­ணுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தற்கு ஒப்­பா­ன­தாகும். இதனை நாங்கள் விரும்­ப­வில்லை. எதிர்க்­கின்றோம்.

உண்­மை­யி­லேயே மஹிந்­தவை சந்­தித்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை பலப்­ப­டுத்தும் நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கு­மானால் ஐ.தே.கட்­சி­யுடன் இருக்கும் உறவை உத­றித்­தள்ளி விட்டு அந்த அர­சாங்­கத்தை கலைக்க வேண்டும்.

அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை சந்­தித்து பேச்­சுக்­களை நடத்­தினால் அதனை வர­வேற்போம்.

வெறு­மனே இரண்டு தோணி­களில் கால் வைத்­துக்­கொண்டு தீர்க்கமான முடிவெடுக்காது இச் சந்திப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.