கேணியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் வபாத் !

அசாஹீம் 

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை பதுரியாநகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கேணியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் இன்று (04.01.2016) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

4_Fotor
மீறாவோடை 04 எம்.பி.சி.எஸ்.வீதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் பிள்ளைகள் இருவர் மாஞ்சோலை கேணிப்பகுதிக்கு விளையாடுவதற்குச் சென்ற சமயம் அங்கு ஒருவர் தவரி விழுந்த சமயம் மற்றவர் காப்பாற்ற முயற்சித்த வேலை மற்றயவரும் தவரி விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

5_Fotor
மரணமடைந்தவர்கள் மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்கும் மன்சூர் முஹ்சீன் (வயது – 13) மற்றவர் நாசர் பைனாஸ் (வயது – 15) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சிறாஜியா குர்ஆன் கலாசாலையில் மார்க்க கல்வி பயின்று வருபவர் என்றும் இருவரும் இன்று மாலை 03.00 மணியளவில் விளையாடுவதற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளதாகவும் மிக நீண்ட நேரம் சென்றும் வீடு திரும்பாததால் குடும்ப உறவினர்கள் அப்பகுதிக்கு இன்று இரவு 08.00 மணியளவில் சென்று பார்த்த போது அவர்கள் சென்ற சைக்கிள் இருந்ததாகவும் அவர்களைக் கானாததால் அந்த கேணியில் தேடிய போது அவர்கள் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

7_Fotor
இருவரின் ஜனாசாக்களும் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

10_Fotor

11_Fotor