நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

ஜவ்பர்கான்-மட்டக்களப்பு நிருபர்

 
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடலில் நேற்று மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொழுதைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தவருடன் வந்த பனிச்சையடிப் பகுதியைச் சேர்ந்த யூலியன் வின்சன் எல்மர் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 
நீரில் மூழ்கி காணாமல் போன இவர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.