ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் என்ற பெயரில் பல போலிகள் நடமாட்டம் :பட்டிருப்பு அமைப்பாளர் கணேசமூர்த்தி

 

ஜவ்பர்கான்-

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் என்ற பெயர்களிலும் கடிதத்தலைப்புகளுடனும் பல போலிகள் நடமாடிவருவது குறித்து மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

 

பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக சோ.கணேசமூர்த்தியும் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஏ.சசிதரனும் கட்சியின் அமைப்பாளர்களாக செயற்பட்டுவருகின்றனர்.

 

இவர்களைத்தவிர வேறு எவரையும் கட்சித்தலைமை மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பகுதிக்கும் அமைப்பாராக நியமிக்கவில்லை.என்பதை மகளுக்கு ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்துவதாக கணேசமூர்த்தி மேலும் தெரிவித்தார்.