திருகோணமலை கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு சென்றவர் கைது!

  எப்.முபாரக்                     

கந்தளாயில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி உழவு ஈயந்திரத்தில் மணலை கொண்டு சென்ற நபர் ஒருவரை செவ்வாய்கிழமை(29)மாலையில் கைது செய்துள்ளதாக ஜாயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                             அனுமதிபத்திரமின்றி உழவு இயந்திரத்தில் கந்தளாயில்இருந்து சமகிப்புரவிற்கு கொண்டு சென்ற போதே போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.                             

 

குறித்த 24வயதுடைய சந்தேக நபரையும்,அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு,                            

 

புதன்கிழமை (30)கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் ஜயந்திர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.