எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் : அமைச்சர் சந்திம வீரக்கொடி நம்பிக்கை !

எரிபொருள் தொடர்பிலான புதிய விலைச் சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையிலுள்ளதாக பெற்றோலியவள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
c947af989a910f5c03176296409f525f_XL

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் ஏன் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லையென மக்கள் விடுதலை முண்ணனியினர் கேள்வியெழுப்பியிருந்ததோடு . ஒரு லீற்றர் டீசலை 79 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே புதிய விலையில் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான விலை சுற்று நிருப அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அத்துடன் மக்களுக்கு நன்மை பயன்படும் வகையில் புதிய விலை பட்டியலுக்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.