முதலாம் திகதி முதல் பஸ்ஸினுள் பிச்சையெடுப்பதும் , வியாபாரம் செய்வதும் தடை !

பஸ்ஸினுள் பிச்சையெடுப்பதையும் வியாபாரம் செய்வதையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடை செய்யவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

2006030722120301_992607e

பஸ்ஸினுள் பிச்சையெடுப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்வோரை கைது செய்யுமாறு இன்று பொலிஸ்மா அதிபரை வலியுறுத்தவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்

குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பஸ்ஸினுள் நடந்து கொள்வதாக பயணிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமையவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.