பலநோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது !

அபு அலா 

 

 அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் ஏ.எம்.இர்பான் இன்று (20) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று மதியம் கூட்டுறவு அபிவிருத்தி கல்முனை பிராந்திய உதவி ஆணையாளர் வை.எல்.எம்.லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிருவாகத்தினரை தெரிவு செய்வதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 14 கிளைக்குழு நிருவாக கட்டமைப்பின் கீழுள்ள 100 பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் மூலம் மத்திய நிருவாக உறுப்பினர்கள் 9 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

DSC04208_Fotor

இதன் அடிப்படையில், இளைஞர்கள் 2 பேரை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 4 பேர் போட்டியிட்டு அதில் எஸ்.எல்.பசீல் – 64 வாக்குகளையும், ஏ.எஸ்.எம்.நயீம் – 56 வாக்குகளையும் பெற்று இளைஞர்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்டனர்.

மகளீர் சார்பில் எவ்வித வாக்கெடுப்புமின்றி இரண்டு பேர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர். அதில் ஏ.சீ.றம்ஸானா மற்றும் ஏ.ஜீ.பர்ஸானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏனையோர்கள் 5 பேரை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 பேர் போட்டியிட்டு அதில் எஸ்.எம்.அமீன் – 62 வாக்குகளையும், ஏ.எம்.இர்பான் – 60 வாக்குகளையும், ஐ.எல்.ஹமீட் – 52 வாக்குகளையும், எம்.ஏ.எம்.றபியுதீன் – 47 வாக்குகளையும், எஸ்.எம்.கலீல் றஹ்மான் – 46 வாக்குகளையும் பெற்று ஏனையோர்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட 9 உறுப்பினர்களில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் ஏ.எம்.இர்பானும், உப தலைவராக ஐ.எல்.ஹமீட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வாக்கெடுப்பு பணியில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.லத்தீப், எம்.எம்.ஜூ னைதீன், வை.எல்.எம்.பௌஸ், எஸ்.ஜாபீர் ஆகியோர் ஈடுபட்டனர்.

DSC04209_Fotor