மட்டக்களப்பில் நான்கு தினங்களுக்கு மின்வெட்டு!

 

ஜவ்பர்கான்-

 

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 18.12.20415 முதல் 4 தினங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

power-cut-1

காலை 9..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை யான காலப்பகுதியில் 18.12.2015-அன்று காக்காச்சிவட்டை, சின்னவத்தை, பலாச்சோலை ஆகிய இடங்களிலும் 19.12.2015 அன்று மட்டக்களப்பு நகர பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி ஆகிய இடங்களிலும் 21.12.2015 அன்று குறுமண்வெளி, மகிழூர், எருவில் ஆகிய இடங்களிலும் 22.12.2015 அன்று வட்டவான், காயான்கெணி, மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை மருதங்கேணி தட்டுமுனைஆகிய இடங்களிலும் மின்டெ;டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.