தேசிய மீலாத்தின அங்குரார்ப்பண விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

தேசிய மீலாத்தின அங்குரார்ப்பண விழா முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சினதும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக் கிழமை 24ஆம் திகதி பி.ப.2.00 மணிக்கு அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டி, பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

 

இவ்வங்குரார்ப்பண விழாவின் போது இவ்வருடம் தேசிய மீலாத் விழா போட்டிகளின் போது முதலாம் இடங்களைப் பெற்ற போட்டியாளருக்குரிய பணப் பரிசும், சான்றிதழும் இந்நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளது. குறித்த போட்டியாளர்களுக்கான அழைப்பிதழ் கடிதங்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.